Thursday, November 9, 2023

ஒன்று பலவாகி

 


இன்று பிரதோஷ நன்னாள்

          <> யாரே அறிவார்? <>


     ஸ்ரீ சிவகாமி ஸமேத ஸ்ரீ நடராஜர்- கோனேரிராஜபுரம்.jpg
     
ஒருகால்* ஒயிலாய் ஒருகா லுயர்த்தி
.. ஒருகை நிமிர்த்தி உன்பே ரெழிலில்

உருகா என்றன் உளத்தை மெழுகாய்
.. உருகும் படியாய்ச் செய்வாய் மறுகால்

வருவாய் இலிங்க வடிவில் அதனில்
.. மயங்கி நிற்பேன் மற்றோர் போதில்

அருவாய் ஒளிர்வாய் ஐயா! உன்றன்
.. ஆட்டை யாரே அறிய வலரே!

(*ஒருகால் = ஒரு வேளையில்; மறுகால் = இன்னொரு வேளையில்; ஆட்டை = ஆட்டத்தை. சிதம்பரத்தில் ஐயன் உரு, அருவுரு, அரு என்னும் மூன்று வகை நிலைகளில் காட்சிதருவதைக் குறிப்பது. படம்: இணையத்திலிருந்து.)

... அனந்த் 9/10-11-2023 


No comments: