Friday, January 10, 2025

 இன்று சனிப்பிரதோஷச் சிறப்பு நன்னாள்.  

                                                            திருச்சிற்றம்பலம்

                                                        <>  போற்றி நிற்பேன் <>

                                         

                         தென்புலியூர் வாழ்துரைநின் செங்கமலத் திருவடியைச்
                            .. சேர்ந்தோரின் குறைகளைநீ தீர்த்திடுவா யெனக்கேட்டிங்

           
            கென்வகைக்கு நானுமென்ற னிழிநிலையை வகைப்படுத்தி

            … யெழுதியுன்றன் முனமியம்ப வெடுத்திடுமந் நேரத்தைப்

           

            பொன்னவையி லடியர்முனம் புன்னகையோ டாடுமுன்றன்

            … பொற்பிலுள முருகியுனைப் போற்றுதலிற் கழிப்பேனேற்

           

            பின்னுமிந்தப் பிறப்பிறப்புச் சுழலினில்பட் டுழலாமற்    

            .. பேரின்ப நிலையிலென்றும் பேராம லிருப்பனன்றே.

                 

                  பதம் பிரித்து:

            தென்புலியூர் வாழ்துரைநின் செங்கமலத் திருவடியைச்

            .. சேர்ந்தோர்தம் குறைகளைநீ தீர்த்திடுவாய் எனக்கேட்டிங்(கு)

           
            என்வகைக்கு நானுமென்றன் இழிநிலையை வகைப்படுத்தி

            … எழுதியுன்றன் முனம்இயம்ப எடுத்திடும்அந் நேரத்தைப்

           

            பொன்னவையில் அடியர்முனம் புன்னகையோ(டு) ஆடுமுன்றன்

            … பொற்பில்உளம் உருகியுனைப் போற்றுதலில் கழிப்பேனேல்

           

            பின்னுமிந்தப் பிறப்பிறப்புச் சுழலினில்பட் டுழலாமல்    

            .. பேரின்ப நிலையிலென்றும் பேராமல் இருப்பனன்றே.

 

            (பேராமல் – பெயராமல், விலகாமல்.)

 

                                                ….. அனந்த் 10-1-2025

No comments: