Friday, January 31, 2025

 திருச்சிற்றம்பலம்

 

                    <> தாளேனே <>




 

ஆற்றா தரற்றும் அடியேனின் தொல்லையறத்

தோற்றா திருக்கத் துணிந்தனையோ போற்றியுனை

விண்ணோரும் மாலயனும் வேண்டிநிற்க ஏழையென்னைக்

கண்ணோக்க நேரமின்மை காரணமோ தண்சடையில்

மேவிக் குளிர்விக்கும் வெண்டிரையா ளோடுன்னைத்

தாவி அணைக்கும் தளிருடலாள் கூட்டினிலே பாவியெனைப்

பற்றி நினைக்கப் பரமனுனக்(கு) ஓர்நொடியும்

சற்றும் கிடைத்திலையோ சங்கரா பற்றியகை

ஓட்டில் இடும்பலிக்காய் ஊரெல்லாம் சுற்றிவந்த

வாட்டத்தில் என்னை மறந்தனையோ- ஆட்டத்தின்

ஓட்டத்தில் இங்குயான் உள்ளேன் எனும்நினைப்பும்

ஓட்டம் பிடித்ததுவோ உத்தமர் பாட்டமுதை

அள்ளிப் பருகிற்கும் அவ்வேளை அடியேனின்

கள்ளம் நிறைமனத்தைக் கண்டென்னை ஒதுக்கினையோ

இன்னுமுன் நெஞ்சம் இளகிலையேல்

என்செய்வேன் யார்க்குரைப்பேன் ஈசஇனித் தாளேனே.


… அனந்த் 10-2-2025

No comments: