Wednesday, March 26, 2025

 


திருச்சிற்றம்பலம்



இன்று பிரதோஷ நன்னாள்.


    திருச்சிற்றம்பலம்


<> சீரை நிலைநாட்டுவாய் <>




போகத்தை நுகர்தல்யான் ஒழிக்க வொட்டேன்

.. புன்மையாம் செயல்களைப் புரிவேன் நித்தம்

ஆகத்தைப் பேணுவேன் அறிவைத் தேடேன்

.. ஆயினும் உன்புகழ் கேட்ட பின்னர்

போகத்தான் யான்விடேன் உன்றன் தாளை;

.. புல்லரைக் காத்தருள் புரிவோய்! பெண்ணைப்

பாகத்தில் வைத்துள பரமா! என்னைப்

.. பாலித்துன் சீர்நிலை நாட்டு வாயே.

 


அனந்த் 26/27-3-2025  

 


No comments: