திருச்சிற்றம்பலம்
<> கருணை இமயம் <>
கள்ளக் குரம்பையொன்றைக் காட்டியெனை அதில்புகுத்தித்
தள்ளிவிட்டாய் என்றுபழி சாற்றியஎன் கண்முன்னே
வெள்ளச் சடையோய்!உன் விந்தைஉருக் காட்டிஇன்ப
வெள்ளத்தில் ஆழ்த்தியபின் வேறுநினைப்(பு) அகற்றிஎன்றன்
உள்ளத்தின் அடித்தளத்தில் உன்னிருப்பை உணரவைத்தாய்
பள்ளத்தில் இருந்தேனைப் பனிவரையில் உறைவோய்!நீ
மெள்ள எடுத்துன்றன் மேன்மை தெரியவைத்தாய்
வள்ளலுன்றன் கருணைசொல வார்த்தையிலா(து) ஆகினனே!
(குரம்பை = உடல்)
...அனந்த் 27-10-2016

No comments:
Post a Comment