Wednesday, October 11, 2023

இன்று பிரதோஷ நன்னாள்

திருச்சிற்றம்பலம்

 

           <> யான் அறியேன் <>

                                       

தென்புலி யூரிலே திருநடம் ஆடிடும்

.. தேவ!நீ தொழுமடி யாருக்(கு)

என்னையே தருவனென் றெழில்கரம் நீட்டி

ஈர்த்திடல் கண்டுமிப் பாரோர்

பொன்னிலும் பொருளிலும் தம்முடைப் பொழுதைப்

.. போக்குவர் என்றுயான் அறியேன்

முன்னைசெய் தீவினை அத்துணைப் பெரிதோ

… மொழிவைநீ முதலினும் முதலே.

                      🌸🙏🏽🌸


                                   < மனங்கொள்வீர் >

                 

பணிபலயான் ஆற்றியுன்றன் பாதவிணை பற்றுகையில்

பணிபலஎற் குளவுன்னைப் பார்த்திடப்போ தில்லையெனின்

அணிபலபூண் டருகிருக்கும் அன்னையுனைக் கடியாளோ?

மணிபலசேர் மன்றிலுறை மன்ன!இதை மனம்வையே


                                                                    .... அனந்த் 12-10-2023

No comments: