Saturday, December 23, 2023

 இன்று பிரதோஷ நன்னாள்.

திருச்சிற்றம்பலம் 


        <> ஏக்கம் அறிந்திலையோ? <>



(வாய்பாடு: கூவிளம் கூவிளம் கூவிளம் கூவிளம் 

           கூவிளம் புளிமா தேமா)


எங்கிருந் துன்னைநான் எண்ணினும் நெஞ்சினை  

…. எரியினில் மெழுக தாக்கி 

… ஏதுநான் செய்யினும் இறைவ!நீ என்முனம்  

…   இருப்பதாய் உணர வைத்துப்  

 

பொங்கிடும் அன்புடன் புனித!நின் பொற்பினைப்  

…. பொழுதெலாம் பேச வைத்துப் 

……..புன்மையன் என்னைநீ மாற்றிடின் புவியெலாம்  

……….புகழ்ந்திடும் உன்னை அன்றோ?  

 

மங்கையோ டென்முனே வந்தெனைக் காத்திட 

…. வருவதாய்க் கனவு காண்பேன் 

……. எங்கணும் என்றுமே இலங்கிடும் பரம!என்  

………..ஏக்கம்நீ அறிந்தி லாயோ? 

 

கங்கையும் திங்களும் கொன்றையும் சடையில்நின் 

….. கருணையைச் சாற்று மன்றோ? 

….. கனகமா மன்றிலே கதிசுதி சேரவோர் 

…….. களிநடம் ஆடு வோனே. 


  ..... அனந்த் 24-12-2023

No comments: