திருச்சிற்றம்பலம்
இன்று பிரதோஷ நன்னாள்
<> இடபத்தின் அழைப்பு <>
அடியார் வேடம் நான்தரித்துன்
.. அருகே நின்றிங்(கு) அரற்றுவது
.. அருகே நின்றிங்(கு) அரற்றுவது
செடியார் புன்சொல் எனஉனக்குத்
…தெரியு மென்று நானறிவேன்
துடியார் கரத்தோய்! துட்டரையும்
..தூய்மைப் படுத்தும் உனதருளைக்
கொடியார் இடபம் கூறுவது
.. கொண்டே கூட்டம் திரளுமிங்கே!
(செடிஆர் = அற்பமான, குணமில்லாத; துடி = உடுக்கை; கொடி ஆர் = கொடியில் உள்ள.)
… அனந்த் 10-12-2023

No comments:
Post a Comment