Thursday, March 7, 2024

பாசமறுப்பாய்

 இன்று மகாசிவராத்திரிப் பிரதோஷச் சிறப்பு நன்னாள்

திருச்சிற்றம்பலம்

<> பாசமறுப்பாய் <> 


 



இராப்பகல் இல்லா இறையுனக்கு யாமோர்

இராத்திரி என்றோர் தினங்குறித்தெம் நெஞ்சார

ஈசனுன்னை ஏத்தி வழிபடுவோம் எம்பந்த

பாசமற வேண்டிப் பரிந்து.

                              **********

                     <> உருகினேனே <> 


     



உன்றிருத் தலங்களைக் காண்பதற் கென்றே

.. ஓடிவந் துற்ற என்னைக்

கன்றினைக் காணுறு தாய்ப்பசுப் போலக்

காத்துநீ கனகம் வேய்ந்த

மன்றினைக் காட்டி மலையையும் காட்டி

மயிலையில் அன்னை யோடு

நன்றுநின் கோலமும் காட்டிநீ ஆண்ட

.. நலத்தினில் உருகி னேனே.

                              **********

அனந்த்  8-3-2024

No comments: