Friday, April 5, 2024

இன்று சனிப்பிரதோஷச் சிறப்பு நன்னாள்.

திருச்சிற்றம்பலம்

                                <>  தழல் <>

                                                  











துன்னுமிருள் கிழிக்குஞ் சுடுதீ அனையசடை

மன்னுமரு ளீசன் மாயை மருண்டோடப்

பொன்னொளிரு மேடை புகுந்து நடமாடித்

தன்னடியார் நெஞ்சுள் சொலிக்கும் தழலெனவே.

                                     ************

                                      <> அருள் <>

                     

கண்ணிலே தூசு விழுந்துநான் கரையினும்

புண்ணியா உன்றன் புகழ்நினைந் தழுவதாய்

எண்ணிடின் அலாலிவ்  வீனனுன் னருள்பெறப்

பண்ணிலேன் ஏதொரு புண்ணியம் ஐயனே.  


                                                                      .......... அனந்த் 6-4-2024





No comments: