இன்று சோமவாரப் பிரதோஷச் சிறப்பு நன்னாள்
திருச்சிற்றம்பலம்
<> பாதிப் பிறையனைப் பணி <>
பாதித் திடுவினை பாற விழைந்திடின் பாரினில்சம்
பாதித் திடுநல் லவரவர் பற்றைப் பவமெனுமு
பாதி பினர்உனைப் பற்றா திருந்திடப் பனிமலைவாழ்
பாதி மதியனைப் பாடிப் பரவிப் பணிமனமே.
(உபாதி = வேதனை, நோய், தடை, வருத்தம், இடையூறு, துயர்; இது கட்டளைக் கலித்துறை யமகம் )