இன்று பிரதோஷ நன்னாள்.
திருச்சிற்றம்பலம்
என்பாரென் பாரென எல்லாமும் தம்சொந்தம்
என்பார்க் கிலாதததோர் இன்பத்தை - என்பார்
அலங்க லணிந்திடு காடுறையும் ஐயன்
நலமறிவோர் காண்பார் நயந்து.
(என்பார் - என்று கூறுவார், என்பு ஆர் - எலும்பை அணிந்த; என் பார் - என்னுடைய நிலம்; அலங்கல் - மாலை; அணிந்திடு - அணிகின்ற, அணிந்து இடு.)
. .... அனந்த் 22-7-2025
No comments:
Post a Comment