புடப்பொன் மேனி படைத்தோன்காண் புண்ணியன் இவனை நண்ணுமினே!
இன்றுவரை நம்மையெலாம் இவ்வுலகில் - நன்றாக
வாழ்வித் தவன்பேர் மறவாமல் வைத்துள்ளான்
தாழ்ந்தவன்தாள் வீழ்வோம் தினம்.
......... அனந்த் 18-10-2025
திருச்சிற்றம்பலம்
<> கூலி தருவாய் <>
எப்போதும் ஏத்திப் பணியும் அடியவர்க்குத்
தப்பாது காசுதரும் சாமிஉனை – ஒப்புக்குப்
பேசிப் புகழ்ந்துபிறர் முன்நடிப்பேன் என்பணிக்கும்
காசுதரல் வேண்டும் கனிந்து.
(ஒப்புக்கு = போலியாக)