Sunday, November 16, 2025

 இன்று சோமவாரப் பிரதோஷச் சிறப்பு நன்னாள்.


                    திருச்சிற்றம்பலம்

            <>விரும்ப வைத்தான் <>









கரும்பென என்முனம் காட்சிதந் தான்தனைக் காணவென்னை

விரும்பவைத் தான்பினர் வேண்டிய தந்துநான் மீண்டுமவன்

அரும்பதம் தூக்கியவ் வம்பலத் தில்நடம் ஆடுவதைத்

திரும்பவும் கண்டிடத் தாகம் வளர்த்தனன் தில்லைமன்னே
 


                        

<> வி

Saturday, November 1, 2025

இன்று பிரதோஷ நன்னாள்.

 திருச்சிற்றம்பலம் 

                    <> ஈயாயோ? <>


   

உடலில் ஒருகூ(று) உமையன்னை 
.. உறையக் கொடுத்தாய்; உம்பருய்யக் 

 கடலில் எழுந்த விடம்தங்கக் 
.. கண்டம் கொடுத்தாய்; விரிசடையை 

 அடலார் புனலுக்(கு) அன்(று)அளித்தாய் 
  அரனே! எனக்குன் திருவடிக்கீழ் 

 இடந்தந் தாலென் சிரமதன்மேல் 
.. இட்டுய் வேன்நான், ஈயாயோ?

                               .. அனந்த் 1-11-2025