திருச்சிற்றம்பலம்
<> ஈயாயோ? <>
உடலில் ஒருகூ(று) உமையன்னை
.. உறையக் கொடுத்தாய்; உம்பருய்யக்
கடலில் எழுந்த விடம்தங்கக்
.. கண்டம் கொடுத்தாய்; விரிசடையை
அடலார் புனலுக்(கு) அன்(று)அளித்தாய்
அரனே! எனக்குன் திருவடிக்கீழ்
இடந்தந் தாலென் சிரமதன்மேல்
.. இட்டுய் வேன்நான், ஈயாயோ?
.. அனந்த் 1-11-2025