Saturday, August 29, 2020

நாட்டம் கொள்ளாயோ?

                           திருச்சிற்றம்பலம்



Natarajan sep 25 2019.jpg


       <> நாட்டம்  கொள்ளாயோ? <>

 

என்னுள் உறையும் உனையறியா(து)

.. உலகே உண்மை எனஇங்கே

அன்னை இழந்த குழவியைப்போல்

.. அழுமிவ் வேழை நிலையறிந்தும்

இன்னும் எனக்குன் அருளீயா

.. திருப்ப துனக்கோர் விளையாட்டோ?

பொன்னம் பலத்தில் புன்முறுவல்

.. புரிந்து நிற்கும் பொருளிதுவோ?

                  ************

உருகும் ஒருகால் உன்னருளின்

.. உயர்வை நினைத்து மறுகணமே

இறுகும் இரும்பாய் எதையெதையோ

.. எண்ணி என்நெஞ்(சு) அதன்பின்னர்

மறுகும் என்றன் மடைமைகண்டு 

.. வருந்தி இந்த வகையாக

உருளும் என்னை உய்விக்க 

.. உன்றன் உள்ளம் உருகாதா? 

                 ************

 சொல்லில் அடங்கா உன்சீரைத் 

... துதிக்க எண்ணி அமர்ந்தபினர்

பொல்லேன் எனது புன்மையினைப் 

... புகலத் தொடங்கிப் பயனேதும்

இல்லா(து) இனிய பொழுதினைநான் 

... இழப்பேன் இந்த நிலைமாற

நல்லோ னாக எனைமாற்ற 

... நாதா! நாட்டம்  கொள்ளாயோ?  

அனந்த் 30-8-2020

No comments: