Tuesday, September 26, 2023

துணைபுரிவாய்

 

இன்று பிரதோஷ நன்னாள்.


திருச்சிற்றம்பலம் 




                          


 

       <> துணைபுரிவாய் <>

 

படித்தவர்பால் சென்று பரமனுனைப்

.. பணிவகையைப் பயிலா நாயனையேன் 

 

நடித்திடுவேன் நல்லோன் எனப்பிறர்முன்

.. நகையுடன்நீ அதனைக் கண்டுமென்னை

 

அடிக்காதுன் தாள்பால் அணுகுதற்(கு)

.. அனுமதியும் அளித்தாய் ஆங்கதனால்

 

துடிக்கின்றேன் உன்றன் அருட்பெருக்கின்

…திறம்நினைத்துப் புலியூர்த் தூமணியே

 

 

                                                      ……. அனந்த் 26-9-2023

No comments: