Thursday, February 22, 2024

 

                                  <>  காப்பாய் <>



                  

                  
AruNachalam.jpg

 அகந்தையின் நீட்சியாம் எண்ணம் அளிக்கும்*

சகத்தினைச் சாசுவதம் என்றே – உகந்திடா

வண்ணமெனைக் காப்பாய் வரைவடிவில் காட்சிதரும்

அண்ணா அருளாழி யே.

(நீட்சி = நீட்டல்; வரை = மலை; நிதம் = நித்யம்சாச்வதம்.)

குறிப்பு: 1. ”எண்ணங்க ளேமனம் யாவினும் நானென்னும்

எண்ணமே மூலமாம் உந்தீபற 

யானாம் மனமெனல் உந்தீபற;

2. அருணமலையைப் பகவான் ரமணர் அருட்கடல் என்று குறித்தல் உண்டு.

அனந்த் 23-2-2024 


No comments: