Friday, April 19, 2024

 நாளை (20-4-2024) சனிப்பிரதோஷச் சிறப்பு நன்னாள்.

திருச்சிற்றம்பலம்


                   

ஆசையாய் என்னுளே ஆண்டவனுக் காக அமைக்கஎண்ணும்

வாசமார் ஆலய வரைபடம் கண்டதும் வந்துநிற்பார்

நாசமே செய்திட நண்ணியோர் ஐவர்; நடுங்கிநிற்பேன்

ஈசனே! என்றுஇவ் இழிநிலை மாறுமென்(று) ஏங்குவனே


                                       🌺🌺🌺


                                 < அரனும் அரவமும்>

                       

இரவில் நடமாடும் இரைதேடி ஊரும்

அரவத்தோ டாடும் அணியும் – உரியுண்டு

பண்ணிசை கேட்டுப் பரவசங் கொள்ளரவு

எண்ணிலெம் ஈசற் கிணை.

(பாம்பு:  ஒலியெழுப்பிக் கொண்டு படமெடுத்து ஆடும், இரவில் இரையைத் தேடு ஊரும்; தோலாகிய  ஆடை உண்டு.  மகுடியின் இசைக்கு மயங்கி ஆடும்.

சிவன்: இடுகாட்டில் இரவில் நடம்புரிவான்; உணவைத் தேடி காளை மேல் ஊர்வான். அடியார்கள் பண்ணோடு பாடும் இசையில் மனம் மகிழ்வான்.)  





No comments: