Monday, February 26, 2018

ஒன்ற வைப்பாய்


<> ஒன்ற வைப்பாய் <>

குப்பை எனச்சீழ் நிணம்நரம்பு
.. குவிந்த உடலும் என்றென்றும்
தப்பே செய்யும் மனத்தினையும்
.. தந்தாய் இவற்றைத் துணைகூட்டி
எப்போ துன்னை ஏத்துவதற்(கு)
.. இயலும் எனநான் அறியேனே
அப்பாஆல வாயழகா
.. அருளாய் கதியொன்(று) அடியேற்கே

உலகில் என்னை உலவவிட்டாங்(கு)
..ஒவ்வாச் செயல்கள் புரியவைப்பாய்
அலகில் விளையாட்(டுஇறைவனுன்னை
.. அறவே மறந்து திரிகையிலுன்
நிலவைக் காட்டி நீர்காட்டி
.. நின்பால் ஈர்த்தென் நிலையைநினைத்(து)
அழவும் வைப்பாய் அநீதியிதை
..ஆர்பால் கூறி அழுவேனே?

பாடு பவன்நான் பாட்டுடையோன்
.. பரமன் நீயென்று இருவகையாய்
நாடும் இந்த நாடகத்தை
.. நான்வி டுத்து மாற்றமின்றித்
தேடும் பொருளும் தேட்டமுமாய்த்
.. திகழும் பரத்தில் ஒன்றவைப்பாய்
ஆடும் நடத்தின் வழியாக
.. அனைத்தும் உணர்த்தும் என்னரசே!
























அனந்த் 27-2-2018

No comments: