இன்று பிரதோஷ நன்னாள்.
திருச்சிற்றம்பலம்
இடக்கால் தூக்கிப் பொற்சபையில்
.. எழிலோ டாடுங் கால்வலக்கால்
முடக்கு நோயார் முயலகன்மேல்
.. மீளா வண்ணம் வைத்தவனை
மடக்கி நின்ற இறைவா!பின்
.. மதுரை மன்றில் கால்மாற்றி
நடத்தைத் தொடங்கும் இடைவெளியில்
.. நாயேன் நெஞ்சுள் பதியாயோ?
(ஆடுங்கால் -> ஆடும்போது; நோயார் -> நோய் ஆர், நோயுற்ற; மடக்கல் = அடக்கல், தடுத்தல், ஒடுக்கல்; பதித்தல் = அழுத்தி வைத்தல்.)
.. அனந்த் 28-11-2024


No comments:
Post a Comment