புடப்பொன் மேனி படைத்தோன்காண் புண்ணியன் இவனை நண்ணுமினே!
சேதம் விளைக்கத் துணிந்தோரை – வாதிட்டுப்
போதம் புகட்டிய புண்ணியர் போற்றியஉன்
பாதம்விழு வேன்பின்னுன் பாடு!
திருச்சிற்றம்பலம்
உள்ளத்தில் உறைஉண்மை உணர்வாக ஒளிருமுன்னைத்
தெள்ளெனவே திருவடியார் காணு(ம்)வண்ண(ம்) தில்லையிலோர்
ஒள்ளியபொன் தாளுயர்த்தி ஒயில்நடத்தை உன்முகத்தில்
கள்ளமிலாச் சிரிப்புடனே கதிகூரக் காட்டுவையே. .
... அனந்த் 5-9-2025