திருச்சிற்றம்பலம்
<> ஆட வல்லான் <>
தலைமேல் தத்தும் புனல்சற்றும்
.. சரியா(து) அடக்கிச் சந்திரனின்
.. சரியா(து) அடக்கிச் சந்திரனின்
கலைமா றாமல் கவனித்துக்
.. கையில் ஏந்தும் அனலினொளி
.. கையில் ஏந்தும் அனலினொளி
குலையா திருத்திக் கூரையின்கீழ்
.. கொட்டும் முழக்குக் கேற்றவண்ணம்
.. கொட்டும் முழக்குக் கேற்றவண்ணம்
பலவாய் ஆடும் பரமா!நின்
.. பாங்கில் என்னை இழந்தேனே!
.. பாங்கில் என்னை இழந்தேனே!
(கூரை = தில்லை கனகசபையில் உள்ள பொன் தகட்டால் வேயப்பட்ட கூரை)
... அனந்த்
10-9-2015

No comments:
Post a Comment