Tuesday, July 2, 2024

விளக்கிடுவாய்


 திருச்சிற்றம்பலம்

 <> விளக்கிடுவாய் <>





                                                                      
எவ்விடம் ஆயினும்  எப்பொழு தாயினும் இலங்குமோர்  பரமுன் னையோர்
.. எல்லையுள் இருத்தியுன் இயல்பிதே ஆமென இயம்பிடல் தவறே னும்யான்

வெவ்வகை யாகஉன் வடிவினை ஐயநீ விரும்பிடும் அடியர் பலரும்
.. விரித்துன துருவினை விளம்பிடக் கேட்டுளேன் மேலும்நீ  ஆங்க வற்றுள்

இவ்விடத் துள்ளனன் காணுவீர் என்றொரு தலத்தையோ அன்றி அருகில்
... எழில்திகழ் சிலையையோ என்முனம் இருத்துவர் என்மனம் அதையும் ஏற்கும்

வெவ்விடம் தன்னையுன் மிடற்றினில் அடக்கியோய் வெகுளியென் மயக்கை நீக்க
... விரைவிலென் அகத்துளே விளங்கியுன்  சால்பினை விளக்கிட வேண்டு வேனே.

 

 

                           ….. அனந்த் 2-7-2024 

No comments: