Wednesday, July 31, 2024

இன்று பிரதோஷ நன்னாள். 

                                                                திருச்சிற்றம்பலம் 

                                     <> விந்தை புரிவாய் <>


கல்லேன்யான் ஆயினும்பொய் சொல்லேன் உனைவழுத்த 

வல்லேன்யான் அல்லேன்உன் அடியிணைக்கீழ் வந்துநின்றேன்

*கல்லானை தனையன்று கரும்புண்ணச் செய்தோயிப்

பொல்லேனின் பிழைபொறுத்துன் அடியாருள் புகுத்துவையே.

(*இது ஆலவாய் நகரில் சிவபெருமான் நிகழ்த்திய அறுபத்துநான்கு திருவிளையாடல்களில் ஒன்று.)

                                     ********

                            

                        






 




கையாலா காதஇக் கடையேனுன் திருப்பாதம்

கையாலே பற்றினேன் காவாயோ வந்தென்னை?

கையாலே அருள்காட்டிக் கனகசபை தனிலாடும்

ஐயாநீ ஆளாயேல் ஆருள்ளார் புகல்வாயே.



.... அனந்த் 31-7-2024/ 1-8-2024





No comments: