Thursday, July 18, 2024

 இன்று பிரதோஷ நன்னாள்.

திருச்சிற்றம்பலம்

             <> சேவகம் அருள்வாய் <>



ஏவிய கணையை யொத்தென் இருவினைப் பயன்கள் என்னை

மேவியென் நடப்பின் போக்கை விதித்திடுங் காலை உன்னைக்

கூவிநான் அழைத்தென் கையைக் குவித்துனைப் போற்றிப் பாடுஞ்

சேவகம் அருளாய் எற்குத் தில்லைதே வாதி தேவே.   

(கூவிளம் புளிமா தேமா கருவிளம் புளிமா தேமா; விதித்தல் = உண்டாக்கல், நியமித்தல்,.. ) 

                      *****************

               <> வீடடையும் வழி <>




உதைபந்து போல உலகிலடி பட்டு

வதையுற்று வாடிய வேளை - சிதைமலிந்த

காடதனில் ஆடிடும் காலடியைச் சுட்டினான்          

வீடடையும் மார்க்கமீ தென்று.

                        *****************

                                                                                 ... அனந்த்  18/19-7-2024

                                          

No comments: