Wednesday, December 31, 2025

                  திருச்சிற்றம்பலம் 

                     <> என் கதி <>


எண்ணச் சுழலின் நடுவேநான்

.. இங்கும் அங்கும் அலைப்புற்றேன்


அண்ணா மலையாய்! அனுதினமும்

.. அடியேன் லகில் உழன்றலைந்துள்

 

புண்ணா னேன்நான்  இனியுமருள்

.. புரியா திருந்தால் பாழாவேன்

 

கண்ணா ளாஉன் காலிணையே

.. கதியென் றடைந்தேன் காப்பாயே.

                         … அனந்த் 1-1-2026

 

அனந்த்

No comments: