திருச்சிற்றம்பலம்
<> என் கதி <>
எண்ணச் சுழலின் நடுவேநான்
.. இங்கும் அங்கும் அலைப்புற்றேன்
அண்ணா மலையாய்! அனுதினமும்
.. அடியேன் உலகில் உழன்றலைந்துள்
புண்ணா னேன்நான் இனியுமருள்
.. புரியா திருந்தால் பாழாவேன்
கண்ணா ளாஉன் காலிணையே
.. கதியென் றடைந்தேன் காப்பாயே.
… அனந்த் 1-1-2026
No comments:
Post a Comment