திருச்சிற்றம்பலம்
<> ஈர்த்திடுவாய் <>
பார்க்குமிட மெங்கு(ம்)நீ பரந்தொளிர் பாங்கினைப்
….. பாவியேன் அறிந்திலேனே
நீர்க்குமிழி அன்னவிவ் வாழ்க்கையை முற்றிலும்
… நிலையென நிற்குமேழைக்(கு)
ஆர்த்திடுபொற் சிலம்பொடு ஐயநீ தில்லையில்
… ஆடிடும் அழகுகாட்டி
ஈர்த்தெனைஆட் கொண்டிட ஈதுநற் றருணமாய்
… எண்ணிநீ காத்திடாயோ.
..அனந்த் 15-1-2026