திருச்சிற்றம்பலம்
<> கண்ணீரில் கரைந்த வினை <>
அன்னே! நீஎன் அகம்புகுந்துஅங்(கு)
.. அனலைக் கிளப்பி அதன்நடுவில்
முன்னே புரிந்த வினையெல்லாம்
... முற்றும் எரித்தென் முகத்திழியும்
கண்ணீ ரதனில் கரைத்துவிட்டாய்
... காலம் கடந்தேன் கனகசபை
மின்னே! வரையில் பெருவெளியில்
... விளங்கும் பரமே! மெய்யுணர்வே!
(அறுசீர் ஆசிரிய விருத்தம்; வரையில் = வரை (அளவு) இல்லாத)
..... ...... அனந்த் 26-6-2026
No comments:
Post a Comment