Friday, June 26, 2026

 திருச்சிற்றம்பலம்

<> கண்ணீரில் கரைந்த வினை <>


Nataraja and space.jpg


அன்னே! நீஎன் அகம்புகுந்துஅங்(கு)

.. அனலைக் கிளப்பி அதன்நடுவில்

 

முன்னே புரிந்த வினையெல்லாம்

... முற்றும் எரித்தென் முகத்திழியும்

 

கண்ணீ ரதனில் கரைத்துவிட்டாய்

... காலம் கடந்தேன் கனகசபை

 

மின்னே! வரையில் பெருவெளியில்

... விளங்கும் பரமே! மெய்யுணர்வே!

 

(அறுசீர் ஆசிரிய விருத்தம்; வரையில் = வரை (அளவு) இல்லாத)

                           .....  ...... அனந்த் 26-6-2026

No comments: