திருச்சிற்றம்பலம்
<> அவன் கோலம் <>
தேகம் முழுதும் சாம்ப லுண்டு சேரக் கணங்கள் திரளு முண்டு
... தேர்ந்து பூண எலும்பு முண்டு சிகையில் அணிய எருக்கு முண்டு
போகும் இடத்தில் காடு முண்டு பூத முண்டு பேயும் உண்டு
... போற்றிப் பாடக் கிழமு முண்டு புலியு முண்டு அரவு முண்டு
வேகும் உடலம் பலவு முண்டு விண்ணில் சேரும் கூட்ட முண்டு
.. வேதம் ஓதும் நாத முண்டு வேறு வகையில் ஒலியு முண்டு
ஆக இவனை அடைய வழியும் யாதென் றுள்ளம் அயரும் வேளை
... அகத்தில் ஆடிக் காட்ட லுண்டு அதனில் ஆழ்த்திப் பார்த்தல் உண்டே!
(கிழம் = முதிய உரு எய்திய காரைக்கால் அம்மை; புலி= வியாக்கிரபாத (புலிக்கால்) முனிவர்; அரவு = பாம்பின் உடல் கொண்ட பதஞ்சலி முனிவர்)
..அனந்த்
29-6-2015
<> அவன் கோலம் <>
தேகம் முழுதும் சாம்ப லுண்டு சேரக் கணங்கள் திரளு முண்டு
... தேர்ந்து பூண எலும்பு முண்டு சிகையில் அணிய எருக்கு முண்டு
போகும் இடத்தில் காடு முண்டு பூத முண்டு பேயும் உண்டு
... போற்றிப் பாடக் கிழமு முண்டு புலியு முண்டு அரவு முண்டு
வேகும் உடலம் பலவு முண்டு விண்ணில் சேரும் கூட்ட முண்டு
.. வேதம் ஓதும் நாத முண்டு வேறு வகையில் ஒலியு முண்டு
ஆக இவனை அடைய வழியும் யாதென் றுள்ளம் அயரும் வேளை
... அகத்தில் ஆடிக் காட்ட லுண்டு அதனில் ஆழ்த்திப் பார்த்தல் உண்டே!
(கிழம் = முதிய உரு எய்திய காரைக்கால் அம்மை; புலி= வியாக்கிரபாத (புலிக்கால்) முனிவர்; அரவு = பாம்பின் உடல் கொண்ட பதஞ்சலி முனிவர்)
..அனந்த்
29-6-2015

No comments:
Post a Comment