இன்று பிரதோஷ நன்னாள்,
<> வழிநடத்தும் பரமன் <>
திருச்சிற்றம்பலம்
அகந்தையை அழிப்பாய் நீஎன்(று) அகிலம்வாழ் மாந்தர் காண
… அத்தியைப் புலியை மாய்த்தாங்(கு) அவற்றுரி போர்த்தி நின்றாய்
சகந்தனில் கால ஓட்டந் தனைஅவர்க்(கு) உணர்த்து(ம்) வண்ணஞ்
… தளும்பிடும்) நதியை உன்றன் சடையினில் வைத்தாய்; நாடி
உகந்தனை துறவிக் கோலம் உலகில்காண் பொருளில் பற்றை
… உதறுதல் வேண்டு(ம்) முக்தி உற்றிட என்று காட்ட;
பகர்ந்திடப் போமோ இங்ஙன் பற்பல வகையாய் எம்மைப்
.. பரிவுடன் வழிந டத்தும் பரம!நின் அருளின் மேன்மை.
(தளும்புதல் - மனங்கலங்குதல் (எ. கா.) அநுகூல ஜனமானது தளும்பிற்று என்கிறாள்: திவ். பெரியாழ். 3, 7, 5, வ்யா. பக். 713)
..அனந்த் 28-5-2026
No comments:
Post a Comment