Wednesday, May 27, 2026

 இன்று பிரதோஷ நன்னாள்,



                 <> வழிநடத்தும் பரமன் <>

                     திருச்சிற்றம்பலம்

       

அகந்தையை அழிப்பாய் நீஎன்(று) அகிலம்வாழ் மாந்தர் காண

அத்தியைப் புலியை மாய்த்தாங்(கு) அவற்றுரி போர்த்தி நின்றாய்

சகந்தனில் கால ஓட்டந் தனைஅவர்க்(கு) உணர்த்து(ம்) வண்ணஞ்

… தளும்பிடும்) நதியை உன்றன் சடையினில் வைத்தாய்; நாடி

உகந்தனை துறவிக் கோலம் உலகில்காண் பொருளில் பற்றை

உதறுதல் வேண்டு(ம்) முக்தி உற்றிட என்று காட்ட;

பகர்ந்திடப் போமோ இங்ஙன் பற்பல வகையாய் எம்மைப்

.. பரிவுடன் வழிந டத்தும் பரம!நின் அருளின் மேன்மை.

(தளும்புதல் - மனங்கலங்குதல் (எ. கா.) அநுகூல ஜனமானது தளும்பிற்று என்கிறாள்: திவ். பெரியாழ். 3, 7, 5, வ்யா. பக். 713)

                                         ..அனந்த் 28-5-2026

No comments: