Saturday, February 23, 2013

ஆடி(க்) காட்டினாய் 23-2-2013

திருச்சிற்றம்பலம்
இன்று பிரதோஷ நன்னாள்.
திருச்சிற்றம்பலம்

<> ஆடி(க்) காட்டினாய் <>


ஆடிப் புவியெலாம் ஆக்கிப் புரந்தும்
...அழித்தும் கரந்தும் அருளு(ம்)உனைத்

தேடித் தரிசனம் காணத் தலங்கள்
...செல்ல இயலா திருந்தவெனை
நாடிப் பரிந்(து)என(து) உளத்துள் நித்தம்
...நடம்நீ புரிதல் காணு(ம்)வணம்
ஆடி ஒன்றையென் உள்ளே காட்டி
...ஆண்ட விதமோர் விந்தை யன்றே.
(ஆடி=கண்ணாடி; எழுசீர் விருத்தம்.மா விளம் மா மா - மா மா காய் என்ற வாய்பாடு.)

..அனந்த்
23-2-2013