Sunday, November 22, 2015

அலகிலாக் கூத்தன்

திருச்சிற்றம்பலம் 
(14-சீர் விருத்தம்; அரையடி: கூவிளம் விளம் விளம் விளம் விளம் மா தேமா



                                                                        <> அலகிலாக் கூத்தன்  <>

மாமியார் தொல்லையில் லாததோர் மனையென மனமகிழ்ந் திரண்டு மாதர்
மணம்புரிந் தொருத்திஉம் உடலிலே பாதிமற் றொருத்திஉம் தலையி லேற 

ஆமிது தாங்கவொண் ணாதென ஐய!நீர் ஆங்கொரு ஓட்டை யேந்தி 
ஆனின்மீ தேறியே ஊரெலாம் அனுதினம் ஊணிரந் துண்டு வாழும்

சாமியா ராயினீர் என்றுமைச் சகத்தினர் பரிகசம்  செய்வ தைநீர்
சட்டைசெய் யாமலே திரிவதன் காரணம் அவரெலாம் அறிய மாட்டார்

யாமெம தென்னுமோர் மாயையில் யாண்டுமே சிக்கிடா ப் பரம மாம்உம்
.. அலகிலாக் கூத்தினை ஆன்றமெஞ் ஞானியர் மட்டுமே அறிகு வாரே!

..அனந்த்
23-11-2015

Monday, November 9, 2015

எனது உறவு

திருச்சிற்றம்பலம் 


​​ 
<> எனது உறவு <>

கரக்கவொரு பெண்ணிடத் திருத்தவொரு பெண்ணுளன் காமனைக் கடிந்த பரமன் 

உரைக்கவொரு சொல்லிலான் மரத்தடியி லேஅமர் உயர்ந்தஅறி வீயும்குரவன்
   
நரைத்தவிடை யேறிஊண் இரக்குமொரு ஏழைபார் புரப்பனெனப் பேர்பெற்றவன்

பரத்தில்வெளி யாகிஎவ் விறைக்குமிறை யாமிவன் எனக்குமுற வானசிவமே!   

(உயர்ந்த அறிவு = மெய்யறிவு, ஆத்ம ஞானம்)


.. அனந்த் 
9-11-2015