Thursday, July 20, 2017

வேடம்

திருச்சிற்றம்பலம் 


<> வேடம் <>


























ஏதங்கள் என்னை எடுத்து விழுங்கிடும்
வேதனையில் யான்விடும் ஓலமுன் – காதினுக்கு
எட்டினால் ஈசன்நீ எல்லார்முன் டுமந்த
நட்டந்தான் நட்டமா மோ?  1
(ஏதம் – துன்பம்நோய்)

மோனம் பயின்று முனிவர்தமக்(குஆலடியில்
ஞானம் புகட்டுமந்த நற்சமயம் – தீனமாய்
ஈனன்யான் இங்கே எழுப்பும் கதறலால்
மோனம் முறிந்துபோ மோ?  2

மோதகக் கையன் முருகன் உமையோடு
நாதா!நீ சேர்ந்திருக்கும் நற்றருணம் – வேதனையால்
வாடுமென் கூச்சலங்கு வந்துசே ராததுபோல்
வேடம் புனையலா மோ?  3

வேட மெடுத்தாய் விறகுவெட்டி யாய்மாடக்
கூடல்நகர்ப் பாணன் குறைதீர்க்க நாடகத்தில்
வல்லோய்!உன் தாசனென வேடமிட்டு ன்னையான்
வெல்லுமுனம் காப்பாய் விரைந்து.  4

விரைகழல் வேந்த!நீ ஏற்கின்ற வேடம்
விரைவில் கலைந்துனது மெய்யாம் – உருவினைக்
காட்டிக் கொடுப்பதைக் கண்டுளரென் மெய்யுருவை
நாட்டாரெந் நாளுமறி யார்.  5

யார்செயிப்பார் ஆயினும் யானேற்கும் வேடத்தால்
நேர விழைவதுநின் மெய்யடியைச் – சார்தலன்றோ
நஞ்சருந்திப் பாரோர் நலம்காத்தோய்! என்னுள்ள
வஞ்சம் தவிர்க்கஅருள் வாய் 6 

வாய்ச்சொல் செயலெண்ணம் மாறாமல் ஒத்திருக்கும்
வாய்ப்பை எனக்களிக்க மாட்டாயோ– பேயாடும்
காட்டிலும் உன்னருளைக் காட்டும்கூத் தாடிடுவோய்!
ஓட்டாயென் பொய்ம்மை உரு.  7

உருவில்லா உன்னை உருக்கொண்ட என்னால்
ஒருகாலும் ஆகா(து) உணரப் – பெருங்கருணை
கூர்ந்தென்னைச் சீராக்கிக் கூட்டிவைப்பாய் மெய்யடியார்
சேர்க்கையில் யான்திருந்த வே 8.
(கூட்டிவைத்தல் = வேண்டுவன புரிந்து நலஞ்செய்தல்சேர்க்கைசேர்க்குதல்ஒன்றிப்பு.)

வேண்டிநிற்கும் நானும் வெளித்தெரியும் நீயுமெங்கும்
யாண்டும் இருக்கும் அறிவென்று – தாண்டவத்தில்
நீயுணர்த்தும் தத்துவத்தை நெஞ்சில் நிலைநிறுத்தி
ஓயச்செய் என்ஓட்ட மே. 9
(நானும்… அறிவு: இப்பால் நானும் புறத்தே என் கண்கட்குத் தோன்றும் நீயும், இடம், கால வரையில்லாத இருப்பு (’சத்’) பற்றிய அறிவான (’சித்’) ஒன்றே.) 

மேன்மேலும் கூட்டும் வினைகள் விளைவிக்கும்
நானாம்  அகந்தை நசித்திடக் – கோனுன்றன்
தாளென் அகத்துள்ளே  தங்கவைப்பின் வாழுகின்ற
நாளெல்லாம் நன்னாளா மே.  10

அனந்த் 21-7-2017
(அந்தாதி வெண்பாப் பதிகம்)

Wednesday, July 5, 2017

வரமருள்வாய்

                           திருச்சிற்றம்பலம்

                          <> வரமருள்வாய் <> 











நெஞ்சமெ னும்பெருங் காடதி லெள்ளள வேனுமிடம்
..நீங்கலி லாதுநி றைந்துப டர்ந்தெனை வாட்டிவரும்

வஞ்சமு லோபகு ரோதமுங் காமமு மானபுதர்
,, வாடிவ தங்கிம டிந்திட வேண்டிநின் தாளிணையே

தஞ்சமெ னப்புகுந் தேனடி யேனெனைக் காத்தினிமேல்
.. சந்தத முன்நினை வேமன மேவிட நீயருளே

அந்தமி லாவெளி யாகிய சிற்சபை யாமதனுள்
.. ஆதிப ரம்பொரு ளாகவி ளங்கிடு மோர்குருவே.

.. அனந்த் 6-7-2017