Thursday, May 26, 2022

 

  திருச்சிற்றம்பலம்


                                     <> நிசமறிதல் <>      

             


பாரிலே பார்த்திடும் பற்பல காட்சியுள் மனத்தினைப் பதித்த லாலே

.. பட்டிடும் துன்பொடு பலசுகம் யாவையும் மெய்யென நினைக்கும் மாந்தர்

 

ஓர்கணப் போதுதாம் உற்றிடும் உணர்வுகள் உதித்திடும் இடமே தென்றே

.. ஓர்ந்திடில் காண்பர்தம் உள்ளுறை இருப்பெனும் திரையிலே காட்சி யாக

 

நேர்வன யாவுமே நினைவுகள் சேர்க்கையே அன்றிமெய் அல்ல வென்னும்

.. நிசத்தினை அறிந்துதம் நினைவுகள் நானெனும் அகந்தையின் ஆட்ட மென்று

 

தேர்ந்துநின் அருள்நிறை திருவடி சேர்ந்தவர் உன்நினை வன்றி வேறு 
சிந்தனை துறந்துதம் செயல்களை ஆற்றிடின் சிவபதம் அடைகு வாரே.

... அனந்த் 27-5-2022

Thursday, May 12, 2022

 திருச்சிற்றம்பலம்

 

                                 <> குறையேது? <>       

 

                  

                               

           

என்றுமெம் நெஞ்சினுள் இருப்பென இலங்கிடும் ஈசனே உன்னை எம்மால்

.. எளிதினில் அறிவதற் கியன்றிடா வண்ணமாய் எம்மையிவ் ­உலக வாழ்வே

 

நன்றென எண்ணிட நாதநீ வைத்தொரு நகையுடன் தில்லை மன்றில்

நாட்டியம் ஆடிடும் நயத்தினில் எம்மையாம் மறந்தெம துள்ள கந்தை

 

சென்றுன காலடி தன்னிலே சிதைந்தழிந் துன்னுடன் சேரக் கண்டோம்

 தில்லையே சிவபத எல்லையென் றிவ்வணம் மெய்ப்பொருள் தெரித்து நிற்போய்!

 

என்றுமுன் னடிமையான் என்னுமோர் மதர்ப்பிலே ஏழைநான் மிதந்து நிற்பேன்

.. இச்சக வாழ்வினில் எக்குறை வரினுமென்? நீஉளில் இருக்கு மட்டே.

 

(சென்றுன = சென்று உனது; தெரித்து = தெரிவித்து.)

 

அனந்த் 13-5-2022