Wednesday, October 25, 2023

உனது நாடகம்

 


 

திருச்சிற்றம்பலம்

இன்று பிரதோஷ நன்னாள்.


            <> உனது நாடகம் <> 


                           

நானென தெனுமிரு நாண்களைக் கொண்டு

மானிடர் தம்மை ஊனொடு பிணைத்துப்

புலன்களின் அடிமையாய்ப் புவியில் பிறப்பித்(து)

அலைந்திடச் செய்(து)அவர் அவதிபல பட்டாங்(கு)

உலைந்தும் எய்த்தும் உலவிட வைத்(து)அவர்

கலங்கிய மனத்தராய்க் கதறிடுங் காலுன்

காலை அவர்முன் காட்டி அவர்தமை

இன்முகத் தோ(டுநீ ஈர்த்திதைப் பற்றென

நன்னெறி காட்டி நாடகம் ஆடுவ(து)
 ஏனெனக் கேட்க
மானிகர் விழியளே

வாய்திற வாளெனின் யார்பால்

போயிதைக் கேட்போம் புகல்வாய் நீயே!

 

            .. அனந்த் 26-10-2023


Wednesday, October 11, 2023

இன்று பிரதோஷ நன்னாள்

திருச்சிற்றம்பலம்

 

           <> யான் அறியேன் <>

                                       

தென்புலி யூரிலே திருநடம் ஆடிடும்

.. தேவ!நீ தொழுமடி யாருக்(கு)

என்னையே தருவனென் றெழில்கரம் நீட்டி

ஈர்த்திடல் கண்டுமிப் பாரோர்

பொன்னிலும் பொருளிலும் தம்முடைப் பொழுதைப்

.. போக்குவர் என்றுயான் அறியேன்

முன்னைசெய் தீவினை அத்துணைப் பெரிதோ

… மொழிவைநீ முதலினும் முதலே.

                      🌸🙏🏽🌸


                                   < மனங்கொள்வீர் >

                 

பணிபலயான் ஆற்றியுன்றன் பாதவிணை பற்றுகையில்

பணிபலஎற் குளவுன்னைப் பார்த்திடப்போ தில்லையெனின்

அணிபலபூண் டருகிருக்கும் அன்னையுனைக் கடியாளோ?

மணிபலசேர் மன்றிலுறை மன்ன!இதை மனம்வையே


                                                                    .... அனந்த் 12-10-2023