Tuesday, February 23, 2021

அரற்றுவனே

திருச்சிற்றம்பலம்
24-2-2021 பிரதோஷம்

Monday, February 8, 2021

நடிப்பு

                 திருச்சிற்றம்பலம்

                  <> நடிப்பு <>


                    நடராஜன் - 7.jpg

   போதும் மதியுமணி பொன்னம் பலத்தரசே

   ஏது குறையுமக்கென் றிவ்வாறுஎப் – போதுமோர்

   காலை மடக்கிநின்று கட்டப் படுவதுபோல்

   நாலுபேர் முன்னால் நடிப்பு? 


                                   ************

 

            <> புகழில் பங்கு <>



      Image result for Siva drinking poison


   தொண்டைக் குழியில் திரண்டுநிற்கும் நஞ்சுநின்

   தொண்டர்க் கருள்திறத்தின் சின்னமெனக் – கண்டவர்அக்

   கண்டவிடச் சீர்பற்றிக் கண்டவிடம் பேசிநிற்பர்

   உண்டதில்காண் ஓர்பங்(குஉமைக்கு.

 

(பொருள் விளக்கம்: அமரரையும் அசுரரையும் ஆலகால விடத் தாக்குதலிலிருந்து காப்பாற்றிய சிவபெருமானது கழுத்தில் தங்கிய விடம் அவனது அருளின் மேன்மையைச் செப்புகின்ற சின்னம் என உணர்ந்த  அடியவர்கள் பிறருக்கு அதுபற்றிப் பொது இடங்களில் கூறிச் சிவனைப் புகழ்வார்கள். அந்தப் புகழ்ச்சியில்அக்கொடிய விடம் பெருமானின் மேனி முழுது பரவாமல் அவன் கழுத்தளவில் தங்கவைத்த உமையம்மைக்கு ஒருபங்கு உண்டு என்று ஐயனுக்கு நினைவுபடுத்துவதாக அமைந்தவாறு.)


                 ************


            <> உன் பிழை <>

 

    ஏட்டை எடுக்கவைத்தாய் கோலொன்றை என்கரத்தில்
    பூட்டி எழுதவைத்தாய் போற்றியுனைப் – பாட்டையிட்ட
    பின்னரதில் ஏதும் பிழையிருப்பின் ஐய!அஃது
    உன்னதல்லால் என்னதா மோ?  


... அனந்த் 8-2-2021  பிரதோஷ நன்னாள். 

Monday, January 25, 2021

ஓரடி மேல்வைப்பு

                                திருச்சிற்றம்பலம் 


 



      






<> ஓரடி மேல்வைப்பு <>

 

ஈரடியில் ஓரடியை நேரடியாய்ச் சிரத்துயர்த்திப்

பாரடியோ என்றுமுனம் பார்வதிக்குக் காட்டியக்கால்
சீரடியார் தாம்வணங்க ஓரடியே இணையடிக்கு
நேரடியென் றானதுவோ? யாரடிஅச் சூதறிவார்?
ஓரடியார் தம்முள்ளே ஒளிருமடி ஒன்றேஎன் றுணர்வார் தாமே. 

(ஓரடியார் ... தாமே:  உள்முகமாய் ஆழ்ந்து சிந்திக்கும் அடியவர்கள் தம்முள் ஒளிரும் பரமனின் அடி இரண்டற்றதான மெய்ப்பொருள் ஒன்றேயாம் என்று உணர்வார்கள். இப்பாடல், தரவுகொச்சகக் கலிப்பாவின் மேல் ஓரடி வைத்த யாப்பில் அமைந்தது )

அனந்த் 26-12021 பிரதோஷம் 


Wednesday, January 20, 2021

செவியேறுமோ?

                                      திருச்சிற்றம்பலம் 



         


                                <> செவியேறுமோ? <> 

    மானொரு கையில் ஏந்தி மதிபுனல் தலையில் தாங்கி 
    .. வாய்பகு அரவம் ஒன்றை மார்பினில் அணியாய்த் தாங்கி 

    வானெழில் மங்கை நல்லாள் வாமபா கத்தில் தாங்கி 
    .. வானுறை தேவர் பூணும் மணிமுடி தாளில் தாங்கி தீனனென் புன்மைச் 

    சொல்லை இருசெவி ஒன்றி லேனும் 
    .. சீறிடா தேற்கும் இன்றோ நாளையோ எனவே நம்பி

     நான்நிதம் உருகி நிற்றல் நாடிடும் அடியார் முன்னம் 
    .. நர்த்தனம் ஆடும் தில்லை நாதன்என் றறிவான் கொல்லோ?.


(முன்னமுள்ள 4 வரிகளில், ஏந்தி, தாங்கி என்பன பெயர்ச்சொற்களாகப் பயிலும்; பதின்சீர் விருத்தம்அரையடி வாய்பாடு: கூவிளம் மா மா விளம் மா மா)

... அனந்த் 9-1-2021 பிரதோஷம்