Thursday, February 22, 2024

 

                                  <>  காப்பாய் <>



                  

                  
AruNachalam.jpg

 அகந்தையின் நீட்சியாம் எண்ணம் அளிக்கும்*

சகத்தினைச் சாசுவதம் என்றே – உகந்திடா

வண்ணமெனைக் காப்பாய் வரைவடிவில் காட்சிதரும்

அண்ணா அருளாழி யே.

(நீட்சி = நீட்டல்; வரை = மலை; நிதம் = நித்யம்சாச்வதம்.)

குறிப்பு: 1. ”எண்ணங்க ளேமனம் யாவினும் நானென்னும்

எண்ணமே மூலமாம் உந்தீபற 

யானாம் மனமெனல் உந்தீபற;

2. அருணமலையைப் பகவான் ரமணர் அருட்கடல் என்று குறித்தல் உண்டு.

அனந்த் 23-2-2024 


Tuesday, February 6, 2024

பதத்தில் இருத்திடுவாய்

 இன்று பிரதோஷ நன்னாள்.

திருச்சிற்றம்பலம்

                    <> பதத்தில் இருத்திடுவாய் <>




உனையலால் வேறொரு தெய்வம்இவ் வேழையன் உன்னானெனும்

நினைவினை விட்டிங்கு நீமௌனத் துள்ளே நிலைத்திருந்தால்

தனயனைக் காக்கத் தவறினன் என்றுனைச் சார்ந்துநிற்கும்

மனையவள் உன்னை மதியா ளிதைநீ மறந்தனையோ?

 

மறப்பதும் உன்னை மறந்தத னால்மீண்டும் வந்துலகில்                 

பிறப்பது மேபிழைப் பாகுதல் என்றன் பிழையென்பையோ?

அறத்தர சே!தில்லை அம்பல வா!என்னை ஆளும்ஐயே!

புறத்தொரு பாலினிப் போகா திருத்திடுன் பொற்பதத்தே.


..  அனந்த் 7-2-2024