Tuesday, June 24, 2014

காலில்லாத் தெய்வம்


திருச்சிற்றம்பலம்


<> காலில்லாத் தெய்வம்  <> 

காலில்லாத் தெய்வம் களிநடனம் ஆடுவதும்
தோலில்லா மங்கைஅவன் தொங்குசடை நாடுவதும்
பாலில்லா அப்பெம்மான் பால்பத்தர் கூடுவதும் 
ஏலும்பார் இங்கே இனிது.

24.6.2014

விளக்கம்-
காலில்லாத் தெய்வம்நகைச்சுவைக் கோணத்தில்தெய்வம் என்னும் சொல்நெடில்எழுத்திலுள்ள ”கால்” குறி இல்லாதிருக்கும்
உட்பொருள்கால் என்பது காலம்இடம்அளவுமூலம் ஆகியவற்றைக் குறிக்கும்இவையாவும் இல்லாப் பரம்பொருளன்றோ நடராசப் பெருமான்?
தோலில்லா மங்கைஇது கங்கையைக் குறிக்கும்மேலெழுந்தவாரியாக இது நதியானஅவளுக்குப் புறத்தோல்/உடல் இல்லை என்பதைச் சுட்டும்உட்பொருள்தோல் என்பதுதோல்வியைக் குறிக்கும்சிவபெருமானால் அவரது தலைமுடியில் ‘அடக்கப்பட்டவள்என்பதனால் கங்கை தோல்வியடைந்தவள் என்று கருத வேண்டாம்அடிமுடியில்லாஇறைவனின் தலையில் இடம் பெறும் பேறு பெற்றது பெறற்கரிய வெற்றிப்பேறல்லவோ?மேலும்உமையவளைத் தன் மேனியில் இடப்பாகத்தில் வைத்த பரமன்கங்கையாளைத்தலைமேல் வைத்துக் கூத்தாடுகின்றான் அல்லவா?    
பாலில்லாப் பெம்மான்இதுஆண்-பெண்உயர்ந்தது-தாழ்ந்ததுஅடி-நடு-முடி,இங்கு-அங்கு என்ற பாகுபாடு இல்லாத இறைவனைக் குறிக்கும்.  ஏலும்இயலும்.

Tuesday, June 10, 2014

வாழ்ந்து போவாய்


திருச்சிற்றம்பலம் 


<> வாழ்ந்து போவாய் <>


ஊனாரும் உடலமே நான்எனும் உணர்வுடன்
... உலகினில் வளைய வந்திங்(கு)
.....உறுதுன்பம் தாளாமல் உனதடி யார்சொலும்
....... உரைகளைச் செவிம டுத்து

நானாரென்(று) அறிந்திடத் தனிஇடம் ஒன்றைநான்
... நாடியே அமருங் காலை
.....நானாவி தங்களில் நாயினேன் நெஞ்சினில்
..... நடமிடும் நினைவின் ஊடே

ஏனோஉன் பாலொரு கணப்பொழு தாகிலும்
.... என்மனம் ஏகி டாமல்
......இங்கேநான் படும்துயர் ஈச!நீ அறிந்திடா(து)
........இருப்பது நியாய மாமோ?

தானாகச் சென்றுவல் விடத்தினை உண்ணுவாய்
..... தடியடி ஏற்று நிற்பாய்
....... தமியேன்என் மனத்தினில் ஓர்முறை தோன்றிடத்
..........தயங்குவாய் வாழ்ந்து போவாய்!

10-6-2014