Tuesday, August 23, 2022

 திருச்சிற்றம்பலம்

                                    

             


                                          <> என்னிறை <>

 

பன்னிரு கையனும் பணிபவர் இடரறு மூத்தோன் ஐங்கரனும்

……..பக்கல் அமர்ந்துனைப் பரிவுறை விழிகொடு பார்க்கும் பார்வதியும்

 

பின்னிய சடையுறை பிறையொடு கங்கையும் சூழ நீதனியோர்

…...பீடுடன் கயிலையில் வீற்றிடப் பிரமனும் மாலும் தேவர்களும்  

 

துன்னிய கரத்தொடு துதிசொலிப் பணிவதைக் கண்டு மெய்ம்மறந்து

……..சுருதியின் முடிபெனும் சுத்தமெய்ப் பொருளிவன் காணீர் இவனேதான்

 

என்னிறை என்றென தெதிர்வரு பவர்முனம் நாளும் பேசுதல்கேட்(டு)

... என்னையும் உன்னடி யவனென ஏற்றிட எண்ணம் கொள்ளுவையே.

 

(பன்னிருசீர் ஆசிரிய விருத்தம்கூவிளம் விளம் விளம் விளம் மா கூவிளங்காய்.)

அனந்த் 24-8-2022 pradhosham

Monday, August 8, 2022

உபதேசிகன்

திருச்சிற்றம்பலம்

 

   <> உபதேசிகன் <>


Arunachalam.jpg


தானனா தந்தன தானனா தந்தன

தானனா தந்தன தானனா தந்தன

தானனா தந்தன தனதானா

 

போகுநாள் வந்திடு காடுவா வென்றிடு

.. போதிலே யுன்பத மேயுளே நின்றிடு

....... பேறுநீ தந்திட மறவாதே


வேகுகா யந்தனை வேகமே வெந்தழன்

.... மீதிலே யுந்திடு வேளைநீ றென்றுன

....... மேனியே யண்டிட விழைவேனே 

 

பாகுநேர் செஞ்சொலள் பாகனே ஐங்கரன்

.... பாரெலாந் தந்தையர் பேருளே கண்டவவ்

....... வாறுயான் கண்டிட ருளாயோ


மாகமா யன்றொரு நாளிலே நின்றுப

.. தேசமே தந்துமெய் யோதியா முய்ந்திடு

….. மாறரு டந்ததை நினைவேனே.

 


பதம் பிரித்து:

போகுநாள் வந்து இடுகாடு வா ன்றிடு

.. போதிலே உன்பத மேஉளே நின்றிடு

....... பேறுநீ தந்திட மறவாதே


வேகுகா யந்தனை வேகமே வெந்தழல்

.... மீதிலே உந்திடு வேளை நீறு என்று 

....... மேனியே ண்டிட விழைவேனே  


பாகுநேர் செஞ்சொலள் பாகனே ஐங்கரன்

.... பார்எலாம் தந்தையர் பேர் உளே கண்

....... அவ்வாறு யான் கண்டிட அருளாயோ


மாகமாய் அன்று ஒரு நாளிலே நின்று

.. உபதேசமே தந்து மெய் ஓதி யாம் உய்ந்திடுமாறு

….. அருள் தந்ததை நினைவேனே.

 

(உன = உனது; இரண்டாம் அடியின் பொருள்: எனது மேனியை உற்றார் விரைவில் நெருப்பின் மீது தள்ளிடும் போதினில், என் உடல் சாம்பராய் மாறுகையில் அது இடுகாட்டில் நடம் புரியும் உன் மேனியை அடைய விரும்புவேன்.)   


அனந்த் 9-8-2022