Wednesday, August 12, 2015

சந்திக்கும் வேளை




                                                            திருச்சிற்றம்பலம்




                  <> சந்திக்கும் வேளை <> 


ஆட்டம் ஆடுவைநீ அம்பலத்தில் அடியேன்போர் 

.. ஆட்டம் புரிந்திடுவேன் அவனியில்;உன் அன்பர்களின்

 பாட்டில் மகிழ்வாய்;நீ பாவம்நான் பலவாயென்

.. பாட்டில் குவித்திடுவேன், பரமேசா! மெய்யடியார்

கூட்டில் களிப்பாய்நீ; நான்குடும்பம் என்னுமொரு

.. கூட்டில் அடைபடுவேன்; கும்பலுடன் தனிக்கூத்தைக்

காட்டில் பயில்வாய்;என் கால(ம்)வரும் வேளையிலே  

.. காட்டில் துயில்வேன்நான் கண்டுகொள்நீ ஆங்(கு)எனையே!

..அனந்த் 12-8-2015