Monday, May 22, 2017

உய்ய வைத்தாய்

                                                              திருச்சிற்றம்பலம்  

   <> உய்ய வைத்தாய் <>
























அழிவதற் காகவே அவனியில் உதித்தபொய் ஆகமிஃ துண்மை யென்றென்
.. அறிவினால் யாவையும் அறிவனென் றகந்தையாம் ஆற்றடிச் சேற்றில் ஊறி

வழியிது காணென வந்தவர் சென்றவர் வாய்வழி வந்த சொல்லை
.. மாறிலா மெய்யென மதித்தவர் பின்னர்யான் சென்றவர் வலையில் வீழ்ந்து

அழுதழு தோய்ந்தபின் ஐய!நின் அடியவர் அருளிய வாச கத்தின்
..  அருமையும் பெருமையும் அறிந்தவர் தம்மையங்(கு) அனுப்பிநீ காத்த தென்னே!

தொழிலினி எனக்குன தொண்டலால் வேறிலை தோடுடைச் செல்வ! தில்லைச்
.. சொன்னமே! ஆலவாய்ச் சொக்கனே! சோணமா மலையில்வாழ் சோதி யானே! 

(ஆகம் = உடல்; சோண மாமலை= அண்ணாமலை)

..அனந்த் 23-5-2017

Monday, May 8, 2017

இதுவே காரணம்

திருச்சிற்றம்பலம்
















<> இதுவே காரணம் <>

ஆலயந் தோறும் சென்றுன்னை
.. அடியேன் காணத் துடித்திடுதற் (கு)
...... அடியில் மறைந்த காரணத்தை
.......... ஐயா! உரைப்பேன் செவிமடுப்பாய்

மாலயன் காணா மாயனென  
.. வழங்கும் கதையில் மயங்காது
...மன்றில் ஆடும் உன்னுருவை
....மனத்தில் நிறுத்தி வெளிச்செல்லா(து)  

ஓர்லயப் படுத்தி என்னுள்நீ
..உறையும் இடத்தைத் தேடியங்கே
....உனைஎன் உண்மைச் சொருபமென
.....உணர்ந்தாங் கேநான் ஒடுங்கிடுவேன்

காலமெ லாமிவ் வாறுன்னைக்
..கண்டு களிப்பேன் என்னுமென்றன்
...கனவிந்   நாளே   பலித்திடநீ 
...கருணை புரிந்திட லாகாதோ?

.அனந்த் 8-5-2017