Friday, August 18, 2017

திருவடிப் பெருமை

                 திருச்சிற்றம்பலம்

            <> திருவடிப் பெருமை <>

       

















நின்னடி காண நெடுமால் இயன்றிலன் நேயமுடன்
பன்னெடுங் காலம் பரவினர் கண்டிலர் பத்திசெய்த
சின்னவொர் பாலனின் சீவன் பறிக்கச் சினந்துவந்த
வன்னெமன் கண்டனன் மன்னவநீசெயும் மாயமென்னே.
                                    *****

       
​​











மாயை விலக்கும் மருந்தெனச் சாற்றுமுன் மாவடிக்கீழ்
தோயும் சுரர்தம் முடியெனச் சொல்வர் துதிப்பதற்கு
வாயில் புனலொடு வந்தவொர் வேடன் மிதியடியைத்
தாய்மக வின்மிதி தாங்குவ தொப்பத் தரித்ததென்னே!
                                    *****























காலற்குன் காலுமந்தக் காமற்குக் கண்ணும்விண்
பாலலைந் தோர்க்குனது புன்சிரிப்பும் – சாலப்
பரிந்தளித்தாய் நீஎனக்குப் பாருள் இரக்கத்
திரிகையிலுன் தாள்தூசி தா.

விண்பால்… புன்சிரிப்பும்திரிபுர சம்ஹாரத்தைக் குறிப்பதுபரிந்தளித்தாய் –  தண்டித்தருளுவதைக் குறித்ததுதாள்தூசிபுணர்ந்தபின்தாட்டூசி.)
                                    *****
       




















அடியார் எனும்சிலர் ஐயனேஉன்னை
அடிப்பார் செருப்பால்கல் வில்லால் – அடியேன்நான்
உன்னை அடியேன் உவந்துன் அடியிணையை
என்னுள்ளே வைப்பேன்இரு.

..அனந்த் 19-8-2017 சனிப்பிரதோஷச் சிறப்பு நன்னாள்

Friday, August 4, 2017

குடி கொண்டதுவே

இன்று சனிப் பிரதோஷச் சிறப்பு நன்னாள்.

                      திருச்சிற்றம்பலம்

                
             
      <> குடி கொண்டதுவே <>

பஞ்சினின் மென்தாள் பாவையொடு
.. பரமன் பனிவரை மீதினிலே

குஞ்சர முகத்தோன் குமரனுடன்
.. கூடி நடத்திடும் குடித்தனத்தை 

நெஞ்சினில் இருத்த நினைத்தேன்நான்
.. நிகழ்ந்த தேதென அறிவீரோ

தஞ்சமென் றெனது நெஞ்சமவன்
.. தாளின் கீழ்குடி கொண்டதுவே!
                
                        ****

தாடரும் தண்மை இதத்தினிலே
.. தாபம் தணிந்தவென் நெஞ்சினிலே

ஆடிடக் கண்டேன் அரன்குடும்பம்
..  அனைத்தும் அவனுடன் சேர்ந்(து)அந்த

நாடகம்  அதனின் அழகையென்னால்
.. நவிலல் எங்ஙனம்அவருடனே

கூடியென் நெஞ்சும் குதித்திடக்கை
.. கூடும் நாள்வரக் காத்திருப்பேன்.
(தாடரும் = தாள்தரும்)

                        ****

நாடொறும் இந்த வகையாக
.. நானென் நனவிலும் கனவிலுமாய்

ஆடலின் அரசேஉன்னைநினைத்(து)
.. அரற்றல் கண்டினி மேலுமிங்ஙன்

வாடிட லாகா வழியொன்றை
.. வகுத்தல் எளி(து)இனி வெளியிலுனைத்

தேடிட வேண்டா(து) என்னுள்ளே
.. திகழும் உன்னுரு தெரியவைப்பாய்.

                          ****
                                         ..அனந்த் 5-8-2017