Monday, September 28, 2020

காத்திட விரைவாய்

திருச்சிற்றம்பலம்


      (ஸ்ரீ மாறுகால் நடராஜர், மதுரை)

 <> காத்திட விரைவாய் <>

 

இறந்துநான் சென்ற பினரிகத் துள்ளோர்
.. ”
இவன்சிவன் திருவடி நம்பி


மறந்தனன் மற்ற பணியெலாம் இன்று
.. 
மரித்தனன் பயனெதும் இலனாய்;


சிறந்த(து)என் உளதோ சிவனடி பேணித்
.. 
திரிந்தவர்க்(கு)?” என்றுபின் உரைக்கின்


பறந்தலோ போகும் பரமநின் பெருமை
.. 
பரிந்தெனைக் காத்திட விரையே.

 

(எழுசீர் விருத்தம்கருவிளம் மா கருவிளம் மா கருவிளம் விளம் தேமா)

அனந்த் 29-9-2020  

Monday, September 14, 2020

குருபரன்

                       திருச்சிற்றம்பலம் 





                         <>  குருபரன் <>

 

சந்தக் குழிப்பு: தனதன தாத்தன தனதன தாத்தன
              
தனதன தாத்தன தந்ததான

{திருப்புகழ்: விரகற நோக்கியு முருகியும் வாழ்த்தியும்..  http://kaumaram.com/thiru/nnt0986_u.html) 

                                   **

  

ஒருபத மேற்றியு மொருபத நாட்டியு 


… மொருகர மாக்கியு மென்றுமேலு 


.. மொருகர நீக்கியு மொருதனி நேர்த்தியொ 


…..  டொருதிரு நாட்டிய மன்றிலாடும்  


  


 குருபர பார்ப்பதி கணவச டாட்சர 


.. குகனொடு மூத்தவ னும்பராவு  


…. குடியுறை பார்த்திப வெனவுனி லாட்படு 


…  குணமுடை யோர்க்கரு ளுங்குணாளா! 


  


வருவினை போக்கிமு னுளவினை மாய்த்திடு 


… …. வரதப ராத்பர வென்றுபாடி 


…. வருமடி யேற்குன மலரடி காட்டியென் 


…… மனமுன தாக்கிய அன்புபேணி 


  


அருணையி லேற்றிய சுடரென வீற்றுநின்   


.. னருளொளி யார்க்குமெ நன்றுகாண 


…. குருவடி வாய்த்தெரி ரமணநின் மேட்டிமை 


…. . குறைவற நாச்சொலி உய்ந்திடேனோ.  


 


(பார்ப்பதி = பார்வதி; பார்த்திப = அரசனே; பராவு(ம்) = வணங்குகின்ற, புகழ்கின்ற; உன மலரடி = உனது மலர் அடி; யார்க்குமெ= யார்க்குமே; மேட்டிமை = மேன்மை, தலைமை)

... அனந்த் 14-9-2020/ திருத்திய வடிவம்20-9-2020.