இன்று பிரதோஷ நன்னாள்.
திருச்சிற்றம்பலம்
<> உம் பொறுப்பு <>
ஒருகணம் உமக்குநான் ஓய்வுத ராவண்ணம்
… உம்மிடம் நாள்தொறும் உறுதுயர் எல்லாமும்
திரும்பவும் திரும்பவும் செப்புதல் கண்டென்னைத்
… திட்டிநீர் ஒறுத்திடின் தேவரீர் உம்செய்கை
பொருத்தமே என்னலாம் ஆயிடின் புவியெல்லாம்
…. புரந்திடும் பொறுப்புமக் குள்ளதென் றுமதுதிருக்
கருத்தினில் கொண்டிடின் கருணைமே லிட்டென்னைக்
.. காத்திடத் துணிந்திடர் களையமுன் வாரீரோ?
. ..... அனந்த் 9-4-2025