இன்று பிரதோஷ நன்னாள்.
திருச்சிற்றம்பலம்
<> எந்நாளோ? <>
செழுங்கதிரொன்(று)
எழுந்ததெனத் திகழுமுன் திருமுகம்என்
.. சிந்தையுளே உறுதி யாக
அழுந்திடவைத்(து)
அதன்விளைவாய் ஐய!நீ அம்பலத்தே
.. ஆடுகின்ற ஆதிக் கூத்தின்
ஒழுங்கினிலே உறையுமந்த உண்மையைநான்… உணரு(ம்)வணம் .. செய்தெனக்குப் பரிந்து தாய்போல்
அழுங்குழவி
எனஇருக்கும் அடியவனுக்(கு) ஆனந்த
.. அமுதமளித் திடுநாள்
என்றோ?