உ சிவமயம் திருச்சிற்றம்பலம் முருகா
http://groups.yahoo.com/group/santhavasantham/message/19955
விசித்திரத் தெய்வம்
ஓடா நதியணிவீர் உலவா மதியணிவீர்
நாடா மலரணிவீர் நயவா விடமணிவீர்
கூடா இடம்உறைவீர் குறியா மொழிபகர்வீர்
பாடா திருந்திலரே பலவா யடியருமே!
ஓடா நதி, உலவா மதி = சடையுளடங்கிய கங்கையும் பிறை மதியும்;
நாடா மலர் = மாந்தர் விரும்பியணியாத எருக்கு, தும்பை, ஊமத்தை போன்ற பூக்கள்;
நயவா விடம் = அமுதத்தை நாடிப் பாற்கடலைக் கடைகையில் எழுந்த, யாரும் விரும்பாத ஆலகால நஞ்சு;
கூடா இடம் = தகாத இடமான சுடுகாடு;
குறியா மொழி = (தக்ஷிணாமூர்த்தியின்) இன்னதைக் குறிப்பது என்று அறிய இயலாத மொழியான மௌனம்.
http://groups.yahoo.com/group/santhavasantham/message/19955
விசித்திரத் தெய்வம்
ஓடா நதியணிவீர் உலவா மதியணிவீர்
நாடா மலரணிவீர் நயவா விடமணிவீர்
கூடா இடம்உறைவீர் குறியா மொழிபகர்வீர்
பாடா திருந்திலரே பலவா யடியருமே!
ஓடா நதி, உலவா மதி = சடையுளடங்கிய கங்கையும் பிறை மதியும்;
நாடா மலர் = மாந்தர் விரும்பியணியாத எருக்கு, தும்பை, ஊமத்தை போன்ற பூக்கள்;
நயவா விடம் = அமுதத்தை நாடிப் பாற்கடலைக் கடைகையில் எழுந்த, யாரும் விரும்பாத ஆலகால நஞ்சு;
கூடா இடம் = தகாத இடமான சுடுகாடு;
குறியா மொழி = (தக்ஷிணாமூர்த்தியின்) இன்னதைக் குறிப்பது என்று அறிய இயலாத மொழியான மௌனம்.
No comments:
Post a Comment