Tuesday, November 12, 2024

 

திருச்சிற்றம்பலம்

 

        <> ந்தையில் ஆடும் சிவன் <>

      


 

சத்தமிகு சந்தையிலே ஆடிநிற்கும் ஐயாநீ

 

நித்தமும் ஆடும் நியதியைப்பேய் - கத்துகின்ற

 

வெங்காட்டில் காட்டிப்பின்  விண்விஞ்சும் தில்லையாம்

 

அங்காடிக் காட்டிடுவாய் ஆர்த்து. 

{சந்தை= சத்தம் = ஒலிஏழு (சப்தம்)வேத ஒலிகளையும்,அவற்றில் உள்ள ஏழுவகைச் சந்தத்தையும் குறிக்கும் (காயத்ரிஉஷ்ணிக்அனுஷ்டுப்ப்ருகதிபங்க்தித்ருஷ்டுப்ஜகதி)  musical flow, rhythmic movement of verse; 2. vedic prosody; 3. the veda; 4. stanza; verse. சந்தை = (கழக அகராதி: கடைவீதிவேதம் ஓதும் இடம்; அடியார்கள் எழுப்பும் ஓசை நிரம்பிய பொன்னம்பலத்தையும் குறிப்பதாகக் கொள்ளலாம்)வெங்காடு = வெம்காடுசுடுகாடுஅங்காடி = அங்குடி; ஆர்த்து = ஒலி எழுப்பிக்கொண்டு

 

                                                         ....... அனந்த் 12/13-11-2024

No comments: