Sunday, June 22, 2025

இன்று சோமவாரப் பிரதோஷச் சிறப்பு நன்னாள்.


                         திருச்சிற்றம்பலம்


அம்மையுடன் அவனாடும் அழகினைநாம் தரிசிக்க

… அம்பலத்தை நாடுகையில் அவனோநம் அகத்துள்ளே 

நம்மகத்தில் தான்நிதமும் நடிப்பதனைக் காட்டிநம்மை

… நாணமுறச் செய்திடுவான் நமைமறந்து துதிக்கையிலே

இம்மையொடு மறுமையுமே இல்லாத பெருவெளியில்

… இருத்திடுவான் இத்தகைய பெரும்பேற்றை அடைவதற்கு

வம்மின்இவ் வுலகீரே வழிபடுமின் அவன்தாளை

….வாழ்வெடுத்த பயனிதுவே மறவீர்நீர் மறவீரே


                                                             .... அனந்த் 23-6-2025                                

No comments: