இன்று சோமவாரப் பிரதோஷச் சிறப்பு நன்னாள்.
திருச்சிற்றம்பலம்
அம்மையுடன் அவனாடும் அழகினைநாம் தரிசிக்க
… அம்பலத்தை நாடுகையில் அவனோநம் அகத்துள்ளே
நம்மகத்தில் தான்நிதமும் நடிப்பதனைக் காட்டிநம்மை
… நாணமுறச் செய்திடுவான் நமைமறந்து துதிக்கையிலே
இம்மையொடு மறுமையுமே இல்லாத பெருவெளியில்
… இருத்திடுவான் இத்தகைய பெரும்பேற்றை அடைவதற்கு
வம்மின்இவ் வுலகீரே வழிபடுமின் அவன்தாளை
….வாழ்வெடுத்த பயனிதுவே மறவீர்நீர் மறவீரே
.... அனந்த் 23-6-2025
No comments:
Post a Comment