Saturday, November 17, 2012

பிரதோஷப் பாடல் - September 01 2005

உ சிவமயம் திருச்சிற்றம்பலம் முருகா

Posted in agathiyar http://groups.yahoo.com/group/agathiyar/message/36929


தாக மடைந்து தவிக்கையிற் பானகந் தந்ததுபோல்
மோகக் கடலில் முழுகி யமிழும்இம் மூடனுக்கு
நாக மணிந்து நடனமன் றாடுமென் நாதனவன்
யோக நெறியினை யூட்டி உயர்த்தினன்; உய்ந்தனனே!

சுடலைப் பொடிதனைப் பூசிடுந் தூயநற் சுந்தரனைக்
குடலை நிறைமலர் கொண்டு தினந்தொறுங் கும்பிடவே
உடலை யெடுத்தனன்; உண்மையி லிந்த உவகையெனுங்
கடலைப் பருகிட லன்றிவே றெந்தக் கருத்திலனே!

No comments: