Saturday, November 17, 2012

பிரதோஷப் பாடல் - September 15 2005

உ சிவமயம் திருச்சிற்றம்பலம் முருகா

http://groups.yahoo.com/group/agathiyar/message/37132

நாள்தோறும் பிச்சை எடுத்து உண்டு உடுத்தத் துணியுமின்றி பாம்பை இடுப்பில் சுற்றிக்கொண்டு தன்மேல் இரக்கம் காட்டப் பிறரை வேண்டிக்கொண்டு (அல்லது அம்பலத்தில் ஆடிக்கொண்டிருக்கும்) அச்சிவபெருமான் எதைத்தான் நமக்குக் கொடுக்கப் போகிறான் என்று அலட்சியமாக நினைக்க வேண்டாம்! நம்மை வாட்டி வதைத்துக் கொண்டிருக்கும் பிறப்பு-இறப்பு என்னும் கொடும் நோயினின்று விடுதலை பெற்று என்றும் நிலையான பேரின்பத்தை அடையத் தன் காலை அவன் நமக்குத் தருவான்!

அன்றாடங் காய்ச்சி அரையில் அரவோடு
மன்றாடி நின்றோன் வழங்குவான் - என்றென்றும்
இப்பிறவி யென்னும் இழிபிணியி னின்றுநாம்
தப்பி நலமடையத் தாள்.

No comments: