Saturday, November 17, 2012

பிரதோஷப் பாடல் - October 15 2005

உ சிவமயம் திருச்சிற்றம்பலம் முருகா

http://groups.yahoo.com/group/agathiyar/message/36732


தோடொடு தூவெண் மதியணியும் அத்தன்எனப்
பாடுமாம் ஓர்பிள்ளை *பைங்கூழ் அகலஉனை
நாடிஇசை பாடுவராம் நாவரசு அப்பர்அன்று
கூடியுள்ளோர் முன்பு கொடுஞ்சொல் கூறியபின்
வாடி மனம்திருந்தி வாழ்த்துவனாம் ஓர்தோழன்
தேடிப் பரிவாங்கச் செல்லுங்கால் உன்னடியைச்
சூடி இசைபாடச் சேவகனாய் ஓர்தொண்டன்
ஆடும் சிதம்பரத்து ஐய!உனை இவ்வாறாய்ப்
பாடிப் பரவப் பலபேர் உளரென்று
மோடிநீ செய்யாது மூடன்என் பாகேட்பாய்
ஓடி ஒளியாமல் நீ.

* பைங்கூழ்=நோய்; மோடி = செருக்கு, ஆடம்பரம், வஞ்சகம், பிணக்கு

No comments: